Saturday 18th of May 2024 06:16:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
நல்லூர் முருகன் திருவிழாவிற்கான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியது!

நல்லூர் முருகன் திருவிழாவிற்கான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியது!


இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பிலான நெருக்கடி நிலையினை அடுத்து நல்லூர் முருகன் திருவிழா தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா வழமை போல 25 நாட்கள் நடைபெறும்.

இருந்தபோதிலும் திருவிழாவில் பங்கேற்க 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவடி, தூக்குக்காவடி, அங்கபிரதிஷ்டை உட்பட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அன்னதானம், தண்ணீர்ப்பந்தல் உட்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் 50 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே பங்கேற்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE